Our Feeds


Friday, June 3, 2022

SHAHNI RAMEES

இன்று கொழும்பில் மாத்திரமே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் – லிட்ரோ

 

இன்று  (03) 10,000 எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 1 முதல் கொழும்பு 15 வரை மாத்திரமே குறித்த எரிவாயு சிலிண்டர்களின் விநியோகிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 07) வரை நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்றை தினம் 10,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் நிலையில் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை எரிவாயு கப்பல் ஒன்று இலங்கைக்கு வரும் எனவும் அந்த கப்பல் வரும் பட்சத்தில் செவ்வாய்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »