Our Feeds


Wednesday, June 8, 2022

ShortTalk

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய், ஈரப்பலா, வற்றாளை - ஜனாதிபதி உத்தரவு



வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய், ஈரப்பலா, வற்றாளைக் கிழங்கு என்பவற்றை வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த  யோசனையை முன்வைத்துள்ளார்.

பாதுகாப்பான வனப் பிரதேசங்களில் அதிகமாக காணப்படும் பலாக்காய் போன்றவற்றை பறிப்பதற்காக, குறித்த வனங்களுக்குள் நுழைவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை அமைச்சர் மஹிந்த அமரவீரவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த யோசனையை பாராட்டியுள்ள ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய் உள்ளிட்டவைகளை உணவாக வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »