Our Feeds


Friday, June 24, 2022

ShortTalk

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த GOTA GO GAMA போராட்டக்காரர்கள் 7 பேரில் 4 பேருக்கு பிணை



கொழும்பு - கோட்டை மற்றும் தலங்கம பிரதேசங்களில் கடந்த மாதம் 6 மற்றும் 9ம் திகதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த 7 பேரில் 4 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதற்கமைய, ஜகத் மனுவர்ண, தம்மிக்க முனசிங்க, எரங்க குணசேகர, ஜெஹான் அப்புஹாமி உள்ளிட்ட 4 பேரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »