ஜனாதிபதி கோட்டாவை பதவி விலகக்கோரி 58 நாட்களுக்கும் அதிகமாக நடைபெற்று வரும் காலி முகத்திடல் கோட்டா கோ கம போராட்டக் களத்தில் நடக்கும் சம்பவங்களை நேரடியாக மக்களுக்கு கொண்டுவந்து சேர்க்கும் வகையில் “அரகலய FM” என்ற பெயரில் இணையதள ரேடியோ சேவையொன்றை அங்குள்ள இளைஞர்கள் ஆரம்பித்துள்ளனர்.
இன்று முதல் ஆரம்பமான குறித்த ரேடியொ ஒலிபரப்பு சேவையை இணையதளம் மூலம் தொடர்ந்தும் செவிமடுக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.