கொழும்பு 2, கொம்பனித்தெரு டீ.பீ ஜாயா ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் - 2005 ஆண்டு மாணவர்கள் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் கடந்த 04.06.2022 அன்று கல்லூரியின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. - அல்ஹம்து லில்லாஹ்.
இந்நிகழ்வில் இன, மத பேதமின்றி அனைத்து மத மக்கள், ஏனைய பாடசாலை மாணவர்கள், அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர். விஷேடமாக அதிகளவில் புதுமுக கொடையாளிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வில் குருதி கொடையாளிகள் 80 ற்கும் மேற்பட்டோர் சமூகமளித்து 68 கொடையாளிகள் இரத்தம் வழங்கியிருந்தனர்.
எமது நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றதற்கு தூயோன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதோடு, அதிபர் (டீ.பீ ஜாயா ஸாஹிரா கல்லூரி), பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், டீ.பீ ஜாயா ஸாஹிரா கல்லூரியின் சாரணர் அணியினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.