ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கு முன்னாள் நிதியமைச்சரும் அக்கட்சியின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றையதினம் (09) முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ள பசில் எம்.பி, தனது தீர்மானத்தை அறிவிப்பார் என்றும் தெரியவருகிறது.
இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவோ அல்லது எதிர்காலத் தேர்தலில் போட்டியிடவோ முடியாது என்ற சரத்து இந்தத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு பதவியிலிருந்து விலக்கப்படுவதற்கு முன்னரே தனது பதவியை இராஜினாமா செய்வது உசிதமானது என பசில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் 21ஆவது திருத்தம் குறித்து பசில் கலந்துரையாடியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பஸில் பாராளுமன்றம் வந்தது தேசியப்பட்டியல் எம் பி ஜயந்த கெட்டகொட ராஜினாமா செயததை தொடர்ந்தே ஆனால் அஜிட் நிவாட் கப்ராலின் வெற்றிடத்துக்கு மீண்டும் பஸிலுக்காக பதவி துறந்த ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டார்.