இரண்டு வாரங்களுக்குள் மேலும் 12 அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அருண சிங்கள நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது 18 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 12 அமைச்சர்கள் மற்றும் 30 ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அந்த நாளிதழ் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் ரிஷாத் பதுர்டீன் மனோகனேஷன் திகாம்பரம் உள்ளிட்டவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் 3 அல்லது 6 பேர் வரை அமைச்சர்களாக நியமிக்கப்படுவர்கள் என அந்த நாளிதழ் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.