Our Feeds


Tuesday, July 26, 2022

SHAHNI RAMEES

சட்டவிரோதமான முறையில் 1900 லீற்றர் டீசல் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

 

சட்டவிரோதமான முறையில் 1900 லீற்றர் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை ஹம்பாந்தோட்டை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் நேற்று (25) இரவு குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பெறப்பட்ட உரிய டீசல் அதிக விலைக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டீசல் பதுக்கி வைத்திருந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டு இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »