பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தெளிவான வேலைத்திட்டம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை பின்பற்றினால் 05 மாதங்களுக்குள் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
CNN செய்திச் சேவைக்கு வழங்கிய நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கலாநிதி நந்தலால் வீரசிங்க இது தொடர்பில் விளக்கமளித்தார்.