Our Feeds


Monday, July 4, 2022

SHAHNI RAMEES

நாட்டில் 7,000 பேரின் உயிருக்கு காத்திருக்கும் ஆபத்து!

 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அனைத்து துறைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் சுமார் 7,000 பேர் இருதய சத்திர சிகிச்சைக்காக காத்திருப்பதாக அரச தரப்பு சார்பில் நாடாளுமன்றில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சுமார் 4000 பேர்,கண்டியில் 2000 பேர்,யாழ்ப்பாணத்தில் 1000 பேர் நாட்டில் சுமார் 7000 ஆயிரம் பேர் இருதய சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.இவர்களுக்கான சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மருத்துவர்கள் உட்பட மருந்து, உபகரணங்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »