Our Feeds


Saturday, July 23, 2022

SHAHNI RAMEES

ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியமைக்கான காரணத்தை வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...!



தொடர்ந்தும் சட்ட கட்டமைப்பிற்கு

உட்பட்டே செயற்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.


ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றியமை தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (23) கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அரச பொது சொத்தான கட்டடங்களுக்குள் பலவந்தமாக நுழைந்து அங்கு தங்கியிருக்க முடியாது. எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட காலிமுகத்திடலில் முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.


அந்த இடத்திற்கு சென்று பொலிஸார் போராட்டத்திற்கு எந்த தடைகளையும் ஏற்படுத்தவில்லை.


ஜனாதிபதி செயலகத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக அதற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த சில தற்காலிக கூடாரங்களை அப்புறப்படுத்த நேரிட்டது எனவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »