எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை மீள வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக இன்று (31) பிற்பகல் பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் நாம்பதுன்ன தெரிவித்தார்.
இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றிய இராணுவ அதிகாரிகள் மீள அனுப்பப்பட்டால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.