Our Feeds


Monday, August 22, 2022

SHAHNI RAMEES

கத்தியால் தாக்கி திருட முற்பட்ட 13 வயது சிறுவன் கைது..!

 

பண்டாரகம, நாமலுவ பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் பணத்தை திருட முற்பட்ட 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவன் கடை உரிமையாளரான பெண்ணை கத்தியால் தாக்கி திருட முற்பட்டபோது, ​​கடை உரிமையாளர் அதனைத் தடுத்துள்ளார்.

சந்தேக நபரான சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

தாக்குதலின் காரணமாக 33 வயதான கடை உரிமையாளரின் வயிறு மற்றும் வலது கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவன் இதற்கு முன் பலமுறை கடைக்கு வந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக கடை உரிமையாளர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சந்தேகநபரின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »