Our Feeds


Saturday, August 6, 2022

SHAHNI RAMEES

சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க அனுமதி கோரும் கோட்டா!


 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.


எவ்வாறாயினும், அவர் இம்மாத இறுதிவரை சிங்கப்பூரில் தங்கியிருக்கும் வகையில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்காக சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »