2023ஆம் ஆண்டில் சுமார் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் ஆற்றிய வரவு செலவுத்திட்டம் மீதான உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கிளையொன்றை குருநாகல் பகுதியில் நிறுவுவதற்கான யோசனையொன்றையும் முன்வைத்தார். மலையகத்திலிருந்து பொருட்களை கொண்டுவருவதற்கான போக்குவரத்து சேவைகளை விரிவுபடுத்துவதற்காக 200 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்குவதற்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.