Our Feeds


Tuesday, August 2, 2022

ShortTalk

சீரற்ற வானிலையால் 4 பேர் பலி- 8,000 பேர் பாதிப்பு



நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.


சீரற்ற காலநிலையினால் கண்டி, நுவரெலியா, காலி, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக 1,766 குடும்பங்களைச் சேர்ந்த 7,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிலையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், 643 குடும்பங்களைச் சேர்ந்த 3,046 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »