சமூக செயற்பாட்டாளரான ‘ரெட்டா’ என அழைக்கப்படும் ரனிந்து சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 25ஆம் திகதி கோட்டை-இலங்கை வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த நபரை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவிப்பதாக உத்தரவிட்டுள்ளது.