Our Feeds


Tuesday, August 2, 2022

ShortNews Admin

கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் சுட்டுக் கொலை!



(எம்.எப் .பஸீர்)


முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, வங்கி  சந்தியில் இன்று (2) மாலை முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், கொட்டிகாவத்த – முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன உறுப்பினரான சுமுது ருக்ஷான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த  பிரதேச சபை உறுப்பினர்  முல்லேரியா வங்கி சந்தியில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் அவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸார் கொலையாளிகளை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »