இலங்கையின் இறைமை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாக்க சர்வதேச தளங்களில் சீனா எப்போதும் இலங்கையை ஆதரிப்பதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், யுஹான் 5 கப்பல் விவகாரம் இரு நாடுகளுக்கிடையில் முறையாக தீர்க்கப்பட்டதாக இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் இதன்போது குறிப்பிட்டார்.