Our Feeds


Friday, August 5, 2022

SHAHNI RAMEES

நாட்டை ஆள்வது ரணிலா? ராஜபக்க்ஷக்களா? முஜிபுர் ரஹ்மான் கேள்வி!

 

மனித உரிமைகள் மீறல்களிலும், ஜனநாயக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டு அரசாங்கம் சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களை இழப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

உண்மையில் தற்போது நாட்டை ஆட்சி செய்வது ரணில் விக்கிரமசிங்கவா அல்லது ராஜபக்க்ஷக்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.



கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (05) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை பிரகடன உரைக்கு முரணாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அவர் ராஜபக்ஷாக்களின் கட்டளைகளையே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டால் அது ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகையைப் பாதிக்கும் எனக் கூறியவர் , இன்று அது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »