Our Feeds


Monday, August 29, 2022

Anonymous

எரிபொருள் மூலம் மின்சாரம் பெறுவதை நிறுத்த வேண்டும் - சூரிய சக்தி, காற்றாலை மூலம் மின்சாரம் பெற வேண்டும்.

 



எரிபொருள், நிலக்கரிக்காகவே உலக நாடுகள் சண்டையிட்டுக் கொண்டன. இராஜ்ஜியங்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் தான் இரத்தத்தைவிட எரிபொருள் விலை அதிகமென சிலர் கூறுகிறார்கள் என சுயாதீனப் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.


சூரிய சக்தி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க சக்திகளிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எரிபொருளை எரித்து அதனூடாக மின்சாரத்தைப் பெறுவதை நிறுத்த வேண்டும். இதற்கு அதிகளவில் செலவிட வேண்டும் என்பதால், மின்சாரக் கட்டணம் உயர்வதை தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார். 

பெற்றோல் விலையை அதிகரித்தால் பிரச்சினை இல்லை. ஆனால் டீசல் விலையை அதிகரிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »