ஆனமடுவ தோனிகல பகுதியில் வீட்டு உரிமையாளர் ஒருவரின் தோட்டத்தில் எரிபொருள் பவுஸர் ஒன்று இன்று (15) காலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த பவுஸரில் பெற்றோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுன் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்படடுள்ளனர்.
குறித்த பவுஸரில் 9,200 லீற்றர் பெற்றோல் இருப்பதாகவும் 4000 லீற்றர் பெற்றோல் நுரைச்சோலைப் பகுதியிலிருந்து வருகை தந்தவர்களுக்கு வழங்கியதாகவும் ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளில் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாரினால் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரும் நுரைச்சோலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
எரிபொருளைக் கொண்டுவந்து சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக ஆனமடுவ பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்கள் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் மற்றும் ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
