பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான
அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினரும் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவருமான சந்தேக நபர் ஒருவர் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக் களஞ்சியத்தைக் காட்டச் சென்றபோது கல் குவாரியில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். .பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கடுவெல பிரதேசத்தின் ஒரு பகுதியில் ஒருதொகை ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை பொலிஸார் அந்த பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது விசேட அதிரடிப்படையினரிடமிருந்து சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டபோது கல் மேட்டியிலிருந்து கல் குவாரிக்குள் வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.