பதவிகள் இல்லாமை காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன உலைச்சலில் உள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில், பஷில் ராஜபக்ஸவை சந்தித்து இதனை கூறியுள்ளனர்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை, ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தாம், இன்று கவனிபாரற்று இருப்பதாக அவர்கள், பஷில் ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பஷில் ராஜபக்ஸ அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமது கட்சிக்கு புதிய அமைச்சரவையில் அதிக இடங்களை வழங்குமாறு பஷில் ராஜபக்ஸ விடுத்த கோரிக்கையை, ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளதாக தெரிய வருகின்றது.