மலையகத்திற்கான புகையிரத சேவை நாளை (09) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையின் காரணமாக நாவலப்பிட்டி மற்றும் நானுஓயா புகையிரத நிலையங்களுக்கிடையில் இடம்பெற்ற மண்சரிவு, நிலச்சரிவு மற்றும் பாறைகள் விழுந்தமையினால் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், சீரமைப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.