Our Feeds


Sunday, August 7, 2022

SHAHNI RAMEES

குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானவர்களை கண்டறிய நாளை முதல் பரிசோதனைகள் ஆரம்பம்..!

 

நாட்டில் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானவர்களை கண்டறிய பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கான பரிசோதனை கருவிகள் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் கலாநிதி அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

பொரளை மருத்துவ பரிசோதனை நிறுவனம் மற்றும் கண்டி பொது வைத்தியசாலைக்கு நாளை (08) உரிய பரிசோதனை கருவிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »