பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து டீசல் மற்றும் பெற்றோல் ஆகிய இரு கையிருப்புகளும் கிடைக்கவில்லை எனவும் இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி. வி. சாந்த சில்வா இன்று (25) தெரிவித்தார்.
எரிபொருள் பற்றாக்குறையால் பல பெற்றோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும் பெற்றோல் நிலையங்களுக்கு அருகில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் சாந்த சில்வா தெரிவித்தார்.
