Our Feeds


Wednesday, August 10, 2022

SHAHNI RAMEES

கலஹபிடிய பிரதேசத்தில் நபரொருவர் கொலை..!

 



கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் கலஹபிடிய

பிரதேசத்தில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


நேற்று மாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த நபர் மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


58 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


கொலை செய்யப்பட்டவர் மற்றும் சந்தேகநபருக்கு இடையில் காணப்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


சந்தேகநபர் அடையளாம் காணப்பட்டுள்ளதுடன் அவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »