Our Feeds


Wednesday, August 10, 2022

SHAHNI RAMEES

சீன கப்பல் விவகாரம் - அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தலையீட்டிற்கு பின்னால் பெசில்..!

 

சீனக் கப்பல் பிரச்சினை தொடர்பில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தலையீட்டிற்கு பின்னணியில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச உள்ளிட்ட குழு இருப்பதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் D.E.W. குணசேகர தெரிவித்துள்ளார்.

சீன கப்பல் விவகாரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு சீனாவின் நல்லெண்ணத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டால் அதனை இரு நாடுகளும் இணைந்து தீர்த்துக்கொள்ள வேண்டும். வேறு தரப்பினர் தலையிட வேண்டிய அவசியமில்லை. அணிசேரா கொள்கையின்படி இலங்கை செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »