நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தேவையான அனைத்து ஆவணங்களையும் நீதி அமைச்சு தற்போது வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, ஜனாதிபதி ஆவணங்களில் கையொப்பமிட்டதன் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்படுவார் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.