Our Feeds


Wednesday, August 10, 2022

SHAHNI RAMEES

இலங்கையை சுட்டிக்காட்டி வளர்ந்து வரும் நாடுகளுக்கு பங்களாதேஷ் எச்சரிக்கை...!

 


சீனாவிடம் கடனுதவி பெற்று இலங்கையை போன்று பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டாம் என்று வளர்ந்து வரும் நாடுகளுக்கு பங்களாதேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பங்களாதேஷின் நிதியமைச்சர் ஏ.எச்.எம்.முஸ்தபா கமல், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சீனாவின் பட்டுப்பாதை திட்ட முன்முயற்சியின் மூலம் அதிக கடன்களைப் பெறுவது பற்றி வளரும் நாடுகள் இருமுறை யோசிக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

மோசமான கடன் முடிவுகள் நாடுகளை கடன் நெருக்கடியில் தள்ளும் அபாயம் உள்ளது என்ற அடிப்படையில், நாடுகளுக்கான கடன்களை மதிப்பிடுவதில் சீனா மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் சீன ஆதரவு உள்கட்டமைப்புத் திட்டங்கள் வருமானத்தை ஈட்டத் தவறியதாக பங்களாதேஸின் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் சீனாவின் மீது அனைவரும் குற்றம் சுமத்துவதை,சீனா நிராகரிக்கின்றபோதும், சீனாவே இந்த நிலைமைக்கு பொறுப்புக்கூறவேண்டும் என்று பங்களாதேஷின் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »