ஓகஸ்ட் 19ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே எரிசக்தி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், மண்ணெண்ணெய் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.