Our Feeds


Wednesday, August 10, 2022

SHAHNI RAMEES

உணவு மற்றும் எரிபொருள் பிரச்சினையால் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி...!



பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகையானது

30 முதல் 40 வீதம் வரை குறைந்துள்ளதாக இலங்கை தேசிய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


உணவுப் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் பிரச்சினையே பாடசாலை மாணவர்களின் வருகை குறைவதற்கு பிரதான காரணமாக அமைவதாக தெரியவந்துள்ளதாக இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மொஹான் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால், உணவு வழங்க முடியாமல், தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமல், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் ஏராளமான குடும்பங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »