Our Feeds


Saturday, August 6, 2022

SHAHNI RAMEES

வடக்கிற்கு செல்ல இதுவே காரணம்- வாய் திறந்தார் ரவி!


 நாட்டுக்கு டொலர்களை தேடும் திட்டத்துக்காக தான் ஹெலிகொப்டரில் வடக்கிற்கு சென்றதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


வடக்கு கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் 4000 பேருக்கு சதொச வவுச்சர் வழங்கும் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஹெலிகாப்டரில் ஏன் வடக்கே சென்றீர்கள் என்று ஊடகவியலாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ரவிகருணாநாயக்க, “நான் ஏன் போக முடியாது? நான் அரசாங்கத்தில் இல்லை. அதனால் நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன். முதலீட்டாளர்களுடன் சென்று டொலர்களை சேகரிக்க முயற்சிக்கிறேன், ​​​​ இதை ஊடகங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »