Our Feeds


Saturday, August 6, 2022

SHAHNI RAMEES

சிறுவனை கடத்திய நபருக்கு விளக்கமறியல்


 கண்டியில் 9 வயது சிறுவனை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.


30 வயதுடைய சந்தேகநபர் கடந்த 4ஆம் திகதி மஹரகம புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதையடுத்து மஹரகம பொலிஸார் அவரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக கண்டி தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


இதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


கடந்த 3ஆம் திகதி கண்டியில் இடம்பெற்ற எசல பெரஹரவைக் காண பெற்றோருடன் சென்ற 09 வயதுடைய சிறுவனை இந்த சந்தேகநபர் ஏமாற்றி கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார்.


அவிசாவளை – கொழும்பு புகையிரதத்தில் பயணித்த போது சிறுவனதும் சந்தேக நபரினதும் நடவடிக்கைகளை அவதானித்த பயணிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சந்தேக நபரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபர் இதற்கு முன்னரும் சிறு குழந்தையொன்றை கடத்த முயற்சித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »