பேராதனை கண்ணொருவ பாலத்துக்கு கீழ் மறைத்து
வைக்கப்பட்டிருந்த 24 தோட்டாக்கள் மற்றும் வெற்று ரவைகள் கொண்ட பை ஒன்று கடற்படையினரின் உளவுத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கண்ணொருவ பாலத்தின் மத்திய பகுதியின் கீழ் 23 தோட்டாக்கள் மற்றும் வெற்று ரவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றில் 15 எம் 16 தோட்டாக்கள், 4 ரி 56 தோட்டாக்கள், 7.62 ரக தோட்டாக்கள் 3, 9 மி.மீ ரக வெற்று ஷெல் மற்றும் அடையாளம் காணப்படாத தோட்டாக்கள் அடங்குவதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்