Our Feeds


Sunday, August 21, 2022

SHAHNI RAMEES

ஐ.நா அமர்வில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைப்பு?


 நியூயோர்க் நகரில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளதால், செப்டெம்பர் 20ஆம் திகதி தொடங்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 3 முதல் 5 வரை கட்டுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை தனது 193 உறுப்பு நாடுகளுக்கு அறிவித்துள்ளது.


குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் மற்றும் அரசியல் தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் போது பிரதிநிதிகளின் எண்ணிக்கை 3 முதல் 5 வரை இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »