Our Feeds


Tuesday, September 13, 2022

SHAHNI RAMEES

10,000 ஹோட்டல்களை மூடிய கோதுமை மா


 நாடளாவிய ரீதியில் உள்ள 30,000 ஹோட்டல்களில் சுமார் 10,000 ஹோட்டல்கள், கோதுமை மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.


இவை தவிர, கோதுமை மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் காரணமாக நாடு ழுழுவதும் உள்ள அரச நிறுவனங்களில் 3,000 சிற்றுண்டிச்சாலைகளும் 4,600 பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளும் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


மேலும், மேற்குறிப்பிட்ட பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக நிகழ்வுகளுக்கான (திருமண வீடுகள், மரண வீடுகள் மற்றும் மரண வீடுகள்) உணவு மற்றும் பான விநியோக சேவைகள் கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.


உணவு வகைகளின் விலை உயர்வும் இந்த நிலைக்கு மற்றொரு முக்கிய காரணம் என்று தெரிவித்த அவர், கேக், புடிங், வட்டிலப்பம் போன்றவற்றை வீட்டில் தயாரிக்கும் சுமார் 60,000 பேர் முட்டை மற்றும் கோதுமை மா தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். 

  

சம்பாதிப்பதை விட உணவுக்காக அதிக பணத்தை செலவிட வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், வர்த்தக மாஃபியாவிலிருந்து நுகர்வோரை பாதுகாக்க நுகர்வோர் சட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »