யுக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி கார் விபத்தில்
சிக்கியுள்ளார் என அந்நாட்டின் தி கீவ் இண்டிபென்டெண்ட் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.யுக்ரைனின் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியில், இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா ஆரம்பமான போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
போரில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களை யுக்ரைன் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், யுக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.
இதுபற்றி அந்நாட்டின் தி கீவ் இண்டிபென்டெண்ட் என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
யுக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கியின் செய்தி தொடர்பாளர் செர்ஹை நிகிபோரோவ் தனது பேஸ்புக் பதிவில்,
உக்ரைனில் கார் விபத்தில் சிக்கிய அதிபர் ஜெலன்ஸ்கி
ஜனாதிபதி செலன்ஸ்கியின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இதனை தொடர்ந்து ஜெலன்ஸ்கியுடன் சென்ற மருத்துவர்கள் உடனடியாக ஜெலன்ஸ்கிக்கு பரிசோதனை செய்தனர். அவருக்கு லேசான காயமே ஏற்பட்டது. அவரது வாகன சாரதிக்கும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன. இதன்பின்னர், அம்பியூலன்ஸ் ஒன்றில் அவர் கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து பற்றி பொலிஸார் முழு அளவில் விசாரணை நடத்துவார்கள் என நிகிபோரோவ் தெரிவித்துள்ளார் என அந்த ஊடக தகவல் தெரிவிக்கின்றது.