அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60ஆக குறைக்கப்பட்டுள்ளதால், இவ்வருடம் 20 ஆயிரத்துக்கும் 25 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட தொகையினர் ஓய்வு பெறுகின்றனர் என, பொது நிருவாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அரச ஊழியர்களின் ஓய்வூதியம் உரிய முறையில் வழக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லையை 60ஆக குறைத்து பொது நிர்வாக அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்வைத்த வரவு – செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை, 65 ஆக அதிகரிக்கப்பட்டது.
எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் சமர்ப்பித்த இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில், அந்த வயதெல்லை 60 ஆக குறைக்கப்பட்டது.
இதற்கமைவான சுற்றறிக்கையினை பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே நேற்று வெளியிட்டுள்ளார்.