Our Feeds


Tuesday, September 13, 2022

SHAHNI RAMEES

இலங்கையில் இழைக்கப்பட்ட பொருளாதார குற்றம் தொடர்பில் ஐ.நா பேரவையில் கவனம்


 இலங்கையில் இழைக்கப்பட்ட பொருளாதார குற்றம்  தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


ஆணையாளரின் அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள  நிலையில், பொருளாதார குற்றம் தொடர்பிலான குற்றச்சாட்டு  ஆணைக்குழுவிற்கு அப்பாற்பட்ட விடயமென  நேற்றைய அமர்வின் போது வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.


அனைத்து மக்களினதும் மனித உரிமைகளை பாதித்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வினை வழங்குவதாக இருந்தால், ஊழல் மோசடிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


கடந்த காலங்களிலும் அண்மையிலும் இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் ,பொருளாதார குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »