அறிவிக்கப்பட்ட குழாத்தின் படி, உபாதை காரணமாக ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரை தவறவிட்டிருந்த முக்கிய வேகப்பந்துவீச்சாளர் துஸ்மந்த சமீர மீண்டும் இலங்கை அணிக்கு திரும்பியுள்ளார். இதேவேளை ஆசியக் கிண்ண தொடரில் இடம்பெறாத லஹிரு குமாரவிற்கு உலகக்கிண்ண அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குழாமில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களுக்கு மேலதிகமாக அஷேன் பண்டார, பிரவீன் ஜெயவிக்ரம, தினேஷ் சந்திமால், பினுர பெர்ணான்டோ மற்றும் நுவனிது பெர்ணான்டோ ஆகியோர் உலகக்கிண்ண தொடருக்கான மேலதிக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை குழாம்
தசுன் சானக்க (அணித்தலைவர்), தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிசங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, தனஞ்ஜய டி சில்வா, வனிந்து ஹசரங்க, மஹேஸ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, சாமிக்க கருணாரத்ன, துஸ்மந்த சமீர, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷான்