நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டாலும், அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அது தொடர்பில் இதுவரையில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி தமக்கு அறிவித்ததாக சபாநாயகர் கூறியுள்ளார்.
அதற்கு முன்னர் மற்ற கடன் வழங்கிய நாடுகளுடன் கலந்துரையாடல்கள் நடக்க வேண்டும் என்றும் அவர்களின் அறிக்கைகளும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அதுவரை அது யாராலும் தீர்மானிக்கப்படாது என்றும் சபாநாயகர் சபையில் அறிவித்துள்ளார்.
எனவே, ஜனாதிபதி அனைத்து விபரங்களையும் பெற்றவுடன் அதற்கு முன்னதாக அமைச்சரவை விளக்கமளிக்கும் என்றும் அந்த மாநாட்டிற்கு எதிர்க்கட்சிகள், சபாநாயகர், ஆர்வமுள்ள தரப்பினர் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.