(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
முன்னாள் ஜனாதிபதிக்காக அரசாங்கம் 400 மில்லியன் அல்ல 4 ரூபாகூட செலவிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் .ன்று (31) இடைக்கால வரவு – செலவு திட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹண பண்டார உரையாற்றுகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் வீட்டை புதுப்பிப்பதற்காக 400 மில்லியன் ரூபா மதிப்பீட்டை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதித்துக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இதன்போது அவசரமாக சபைக்குள் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி தெளிவுபடுத்தி குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்காக 400மில்லியன் ரூபா அல்ல, 4 ரூபா கூட செலவழித்ததில்லை. என்றாலும் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் விதவைகளுக்காகவும் வீடுகள் வழங்கி, அவர்களை கவனித்துக்கொள்ள அரசாங்கத்துக்கு பொறுப்பு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.