Our Feeds


Thursday, September 1, 2022

ShortTalk

பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாகாது: தாம் பிறரிடம் நிதியைப் பெற்று நெய் உண்பதில்லை - பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா!



(நா.தனுஜா)


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பங்களாதேஷ் இலங்கையைப் போன்று பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்காது என்றும், தமது அரசாங்கம் உரிய திட்டமிடலின் பிரகாரம் நாட்டை அபிவிருத்தி செய்வதாகவும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா தெரிவித்துள்ளார்.

எமக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாகாது என்பதுடன் அவ்வாறு ஆகவும் முடியாது. தாம் பிறரிடம் நிதியைப் பெற்று ‘நெய்’ உண்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1975 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டமையை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே பிரதமர் ஷேக் ஹஸீனா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »