Our Feeds


Monday, June 1, 2026

SHAHNI RAMEES

14 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்! - மௌலவி ஒருவர் கைது

 


இறக்காமம் (Eragama) பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய

மௌலவி ஒருவர், 14 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலிஸாரின் கூற்றுப்படி, இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான மௌலவி, அப்பகுதியை விட்டு தப்பியோடியிருந்த நிலையில், பின்னர் மே 20 அன்று சட்டத்தரணி ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


அதனைத் தொடர்ந்து, அவர் 2026 ஜூன் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


பிரதான சந்தேக நபருக்கு உடந்தையாக இருந்த இறக்காமத்தைச் சேர்ந்த மற்றுமொரு 21 வயதுடைய சந்தேக நபர், இச்சம்பவம் தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்டு மே 09 அன்று அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


ஆரம்பத்தில் மே 20 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், பின்னர் ஜூன் 03 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »