60 வயதுடன் கட்டாய ஓய்வு குறித்த சுற்றறிக்கையின் காரணமாக 300 விசேட நிபுணர்கள் உட்பட 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 800க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெறுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் கலப்பத்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இப்பிரச்சினைகள் காரணமாக நாட்டில் சுகாதார சீர்கேடு ஏற்பட உள்ளதாக தெரிவித்த கலப்பத்தி எம்.பி, இந்த பிரச்சினைகள் காரணமாக கொழும்பிற்கு வெளியே உள்ள வைத்தியசாலைகள் மூடப்படும் ஆபத்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது அங்கு உரையாற்றிய உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, சேவையின் அவசியத்தை கருத்தில் கொண்டு ஓய்வு பெறும் வைத்தியர்கள் தொடர்பில் தலையீடு செய்து ஆராய்வதாகவும் குறிப்பிட்டார்.