கோடீஸ்வரர்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடம் பல கோடி ரூபாவை மோசடி செய்ததார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிராக மேலும் பல முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பு கறுவாதோட்டம் (குருந்துவத்தை) பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் குறித்த சந்தேக நபர் தன்னிடமிருந்து 75 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பண மோசடி தொடர்பில் சந்தேக நபருக்கு எதிராக 11 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.