கண்டி யஹலத்தன்னை வீடொன்றில் தனியாக வசித்து வந்த 65 வயதுடைய இரு பிள்ளைகளின் தயாரான சஹுருவான் பீபி (65) தலையில் தாக்கப்படுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கொள்ளைக்காக வந்தவர்கள் தலையில் தாக்கியமையால் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப கட்டவிசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பேராதனை பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.