Our Feeds


Saturday, October 15, 2022

ShortTalk

வாகனங்களில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு...!






களனி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் பல பகுதிகளில்

1620 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதியொன்று வெள்ளத்தில் மூழ்கியதால் மல்வான, யபரலுவ வடக்கு, யபரலுவ தெற்கு, பியகம கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள 682 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, பியகம – களனி வீதியின் பண்டாரவத்தை சந்தியில் இருந்து ரக்கஹவத்த பாலம் வரையிலான பகுதி, பண்டாரவத்தையிலிருந்து மல்வானை நோக்கிச் செல்லும் சந்தி, மல்வான – கொழும்பு வீதியின் ரக்ஷபான பிரதேசம் மற்றும் புதிய கண்டி வீதியின் யபரலுவ தாழ்நிலத்தின் 13 வது இடுகை ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்நிலையில் குறித்த வீதிகள் ஊடக பயணிக்கும் அனைத்து ஓட்டுனர்களும் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »